25_03

இருப்பதை பகிர்ந்து கொடுக்கலாமே!

பொதுக் காலம் 8ஆம் வாரம்

03.03.2025 - திங்கட் கிழமை 

"கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்" - நீதிமொழிகள் 22:9

இருக்கிறவர் இல்லாதவர், இருப்பதை சரிவர பயன்படுத்துபவர் இருப்பதை வீணாக்குபவர், இருக்கிறதை பகிர்பவர் இருப்பதையும் பிடுங்கிக் கொள்பவர்.

இதில் நான்(ம்) யார்?

மண்ணக செல்வம் அவசியமில்லை என்று எல்லாவற்றையும் துறந்து துறவு வாழ்வு மேற்கொள்வோரும் உண்டு, செல்வம் மட்டுமே போதும் என்று செல்வத்தில் நம்பிக்கை வைப்போரும் உண்டு.

எதுவும் மனிதருக்கு நிறைவு தருவதில்லை. நிறைவு தராதவற்றை தான் மனிதன் பற்றிக் கொண்டிருக்கிறான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:17-27) மண்ணக செல்வம் விண்ணக வாழ்வை பெற்றுத் தராது என்பதால், நிலைவாழ்வை உரிமையாக்கி கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறார் ஒருவர். நற்செய்தி பதிவு செய்கிறது, அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது என்று.

எல்லாம் நிரம்ப பெற்றவர் ஏன் இயேசுவிடம் வர வேண்டும். செல்வத்தை கொண்டு எல்லாவற்றையும் வாங்கி இருக்கலாமே! அவரிடம் செல்வம் இருந்தது, ஆனால் நிறைவு இல்லை, மன நிம்மதி இல்லை. 

நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று வந்தவர் முகவாட்டத்தோடு சென்றார். காரணம் இருப்பதை இழக்க அவர் விரும்பவில்லை. இன்னும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் குடிக் கொண்டு இருந்தது. ஊசியின் காதில் ஒட்டகம் கூட நுழைந்து விடும் இறையாட்சிக்கு செல்வர் உட்பட முடியாது என்று முடிக்கிறார் இயேசு.

ஊசியின் காது விளக்கம் - காண்க https://toserveinhislove.blogspot.com/2024/08/blog-post_19.html?m=1

இருப்பதை பகிர்தல் இழப்பு என்று பலர் கருதுகிறார்கள். பகிர்தல் ஒருபோதும் இழப்பாகாது, அது எப்போதும் சேமிப்பே.

மத்தேயு 6:20 இவ்வாறு சொல்கிறது, "ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை."

எப்போது விண்ணுலகில் செல்வம் சேர்க்க முடியும். நாம் செய்யும் தர்மங்கள், சிறு சிறு நற்காரியங்கள் வாயிலாக நமக்கான செல்வம் விண்ணகத்தில் சேர்க்கப்படும்.

இருப்பதை கொடுத்தால் நமக்கான வெற்றி வாகையை சூடிக் கொள்ளலாம்.

இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொடுப்போம். இறையரசுக்கு தகுதியுடையவர் ஆவோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...