24_10

பின்பற்ற முன்னோக்கி வா...


பொதுக் காலம் 26ஆம் வாரம்

02.10.2024 - புதன் கிழமை 

எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக! - நீதிமொழிகள் 2:20

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் ஒரு முன்மாதிரி இருப்பார் அல்லது முன்மாதிரியான நிகழ்வு இருக்கும். இந்த நபர் அல்லது இந்த நபருடைய வார்த்தை தான் என்னை மாற்றியது என்று சொல்பவரும் உண்டு, இந்த நிகழ்வை பார்த்த பிறகு நான் என்னை மாற்றிக் கொண்டேன் என்று நம்பிக்கை பிறந்த உள்ளத்தோடு சான்று பகர்பவர்களும் உண்டு.

ஒரு நபரை பிடித்து விட்டது என்றால் ஒன்று அவரைப் பின்பற்றி செல்வார்கள் அல்லது அவர் சொல்வதை பின்பற்றுவார்கள். நாகரீகம் என்ற பெயரில் நடைமுறைக்கு ஒவ்வாத சில செயல்பாடுகள் சமூகத்தில் அரங்கேறி கொள்வதற்கு சில தேவையற்ற முன்மாதிரிகள் காரணமாக இருக்கிறது (நடிகர்களின் திரைமறைவான வாழ்க்கை).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:57-62) இயேசுவை மூன்று நபர்கள் பின்பற்ற முன்வருகிறார்கள். முதல் நபரோ, 'நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மை பின்பற்றுவேன்' என்கிறார். அப்போது இயேசு  அவரைப் பார்த்து மானிட மகனுக்கோ தலைசாய்க்க கூட இடமில்லை என்கிறார். இரண்டாவது நபரிடம் இயேசுவே என்னை பின்பற்றி வா என்று சொல்லுகிறார். இரண்டாம் நபர், முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும் என்கிறார். மூன்றாம் நபர் அவராகவே ஐயா நான் உன்னை பின்பற்றுவேன் ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் என்கிறார்.

இயேசுவின் பதிலோ, கலப்பையில் கை வைத்த பின் திரும்பி பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதி உள்ளவர் அல்ல என்பதாக அமைந்துள்ளது.

முதல் நபரிடம் இயேசு எதார்த்தத்தை சொல்கிறார். என்னை பின்பற்ற விரும்பினால் பல்வேறு இடர்பாடுகளை இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அவருக்கு தெளிவு கொடுக்கிறார். 

இரண்டாவது நபர்கள் இதோ தங்களது கடமையை நிறைவேற்ற வீட்டுக்கு செல்வது போல தங்களை காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் எதார்த்தம் என்பது தன் தந்தையின் அடக்க சடங்கில் ஈடுபடுவது வழியாக அவர் தனக்குள்ள சொத்தை பெற வேண்டும் என்பதற்காக கூட அவர் வீட்டுக்கு சில ஆசைப்பட்டு இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது நபரும் அதேபோலத்தான், வீட்டில் அனுமதி என்று சொல்வதன் வழியாக தனக்குரியதை(சொத்தை) தான் பெற்று வர வேண்டும் என்ற மனநிலையோடு அவர் செல்ல எண்ணியிருக்க கூடும்.

இயேசுவை பின்பற்ற எண்ணியவர்கள் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யத் துணியவில்லை. 

இவரைப் பின்பற்றினால் நம்முடைய வாழ்வு சிறக்கும் என்ற மனநிலை அவர்களுக்குள் இருந்த காரணத்தினால் அவர்கள் மூவருமே திரும்பிச் செல்ல வேண்டியதாக இருந்தது. 

ஒருவரை பின்பற்ற வேண்டும் என்று சொன்னால் அவரை பார்த்து முன்னோக்கி செல்ல வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது பின்பற்றுதலின் அடையாளம் அல்ல.

நல்ல தலைவரை பின்பற்றுகிற போது பல்வேறு இழப்புகளை சந்திக்க கூடும். 

பொது காரியங்களில் ஈடுபடுவதன் வழியாக இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும்.

இயேசு என்னும் நல்ல தலைவரை பெற்றுள்ள நாம் அவரை நோக்கிச் செல்வோம்.

இறையாட்சி என்பது பாதியில் வந்து பாதியில் கடந்து செல்வது அல்ல. முன்வைதத காலை ஒருபோதும் பின்னோக்கி வைத்தலாகாது. 



இந்த நாளில் புனித காவல் தூதர்களை தாய்த் திருஅவை நினைவு கூறுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் இருக்கிறார். நம் கால் கல்லில் இடறாத படி அவர் நமக்கு துணை நிற்கிறார். 

காவல் தூதர் விவிலிய ஆதாரம் - 

மத்தேயு 18:10

“இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 

திருத்தூதர் பணிகள் 12:14,15

அது பேதுருவின் குரல் என்பதை உணர்ந்ததும் மகிழ்ச்சியால் வாயிலைத் திறக்காமல் உள்ளே ஓடி, பேதுரு வாயில் அருகே நிற்கிறார் என்று அறிவித்தார்.

அவர்கள் அவரை நோக்கி, “உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா?” என்று கேட்டார்கள். ஆனால் அவர், “அது உண்மையே” என்று வலியுறுத்திக் கூறினார். அதற்கு அவர்கள், “அது அவருடைய வானதூதராய் இருக்கலாம்” என்றார்கள்.

 எபிரேயர் 13:2

"அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு."

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...