24_10

இறையாட்சியின் சிறிய துவக்கம்...

பொதுக் காலம் 30ஆம் வாரம்

29.10.2024 - செவ்வாய்க் கிழமை

"ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத் தக்கது; உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப் பொறுமையோடு இருப்பதே மேல்" - சபை உரையாளர் 7:8

தொடங்கி வைப்பது முக்கியமல்ல... முடித்து வைப்பதும் தான் முக்கியம். தொடங்குவதை யார் வேண்டுமானாலும் தொடங்கி விடலாம், ஆனால் நிறைவை அதற்கான ஆற்றல் உள்ளவர்களே செய்து முடிப்பார்கள்.

ஏதோ வாழ்கிறோம், ஏதோ இருக்கிறோம் என்பது இறையாட்சியின் விழுமியம் அல்ல. புதிய நகர்வு நோக்கி நம் பயணம் செல்ல வேண்டும்.

விதையை போல முளைத்தெழ வேண்டும். விதை வளர்ந்தாலும் பலன் (மரமாக) மக்கி போனாலும் பலன் (உரமாக).

விதைக்கப்படும் விதை மண்ணுக்குள் முடங்கியே கிடப்பதில்லை. விதைக்கேற்ற உரம், வெப்பம், நீர், காற்று எல்லாம் சரிவர கிடைக்கின்றபோது அந்த விதை வளர்ச்சி என்னும் நிறைவை நோக்கி பயணிக்கும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:18-21) கடுகு விதையையும் புளிப்பு மாவையும் விண்ணரசுக்கு இயேசு ஒப்பிடுகிறார். சிறிய விதை பெரிய மரமாக உருவெடுக்கிறது. சிறிது புளிப்பு மாவு முழுவதையும் புளிப்பேற செய்கிறது. 

சிறிய வாய்ப்பு தான் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்பது போல இந்த உவமை கொடுக்கப்பட்டுள்ளது. 

இயேசு ஏன் இதை விண்ணரசுக்கு ஒப்பிடுகிறார்? இயேசு விதைத்த இறையாட்சி இத்தகையது தான். தந்தை கடவுளின் விருப்பத்தை, இறைவார்த்தை வாயிலாகவும் நற்செயல்கள் வாயிலாகவும் எடுத்து சொன்னவர், செய்தவர் இறையாட்சியை (அன்று) இம்மண்ணில் பரப்பினார். அவர் அன்று விதைத்த விதை இன்று உலகம் முழுவதும் கிறித்தவமாக பரவி இருக்கிறது. சிறிய தொடக்கம் தான் ஆனால் அது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் வாழ்வின் தொடக்கம் பெற்றோரிடமிருந்து ஆரம்பித்தது, அது இல்லறம் என்னும் நிலையில் அல்லது துறவறம் என்னும் நிலையில் முடிவு பெறுகிறது. பல்வேறு மாற்றங்களை சந்தித்த நம்முடைய வாழ்க்கை நிறைவில் எத்தகைய மாற்றத்தை கொடுக்கப் போகிறது என்பதுதான் சிந்திக்கப்பட வேண்டியது?

தொடங்கியது போலவே நிறைவும் இருந்தது என்று சொன்னால் தொடங்கப்பட்டதனுடைய நோக்கம் அடிபட்டு போகிறது. 

ஒரு மரம் வளராமல் அப்படியே இருந்தது என்றால் அதனால் பயன் என்ன?

அதேபோலத்தான் நம்முடைய வாழ்க்கையும் இயேசுவில் வளர்ச்சியை காணவில்லை என்றால் அது முற்றிலும் வீண்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...