பொதுக் காலம் 28ஆம் வாரம்
16.10.2024 - புதன் கிழமை
"நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது" - 2 கொரிந்தியர் 3:5
எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும், எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். மற்ற அனைத்தும் தேவை அற்றது.
"ஆகவே நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது" - மத்தேயு 5:37
இங்கு அதிகம் பேசப்படுகிறது, ஆனால் செயல்திறன் குறைவு. ஒரு காரியத்தை தொடங்கு முன்பு அதை பற்றிய விவாதங்கள் பல மணி நேரம் நடைபெறுகிறது. ஆனால் முடிவில் பலன் ஒன்றுமில்லை. (எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்க முடிவதில்லை).
தேவையற்றவைகளை பேசி பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். தற்பெருமை கொள்ளுதல் நம்மில் அதிகம் இருக்கிறது. நான் செய்த செயல்களை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எண்ணுவது வேறு, என்னை மட்டும் தான் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எண்ணுவது வேறு/தவறு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:42-46) இயேசு பரிசேயரை கடிந்துக் கொள்கிறார். எதை செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்யவில்லை. காணிக்கை கொடுப்பதில் முனைப்பு காட்டினார்கள், ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்தவில்லை. முதன்மையான இருக்கையையும் பொது இடங்களில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்பினார்கள். ஆனால் மற்றவர்களின் சுமைகளை ஒருநாளும் உணர்ந்தது இல்லை.
முக்கியத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதது தான் நம் பழக்கம்/வழக்கம்.
முதன்மையானதை தேடுவது தான் நம் வாழ்வின் இலக்கு.
தற்பெருமையும் தன்னலமும் நம்மை ஒருபோதும் உயர்த்தாது.
நம் உடலின் தேவையை பூர்த்தி செய்வது முக்கியமல்ல, மற்றவரின் உணர்வை புரிந்து செயல்படுவது தான் முக்கியம்.
கடவுளை சார்ந்திருந்தால் நாம் கடவுளுக்குரியதை நாட வேண்டும், கடவுள் விரும்புவதை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment