பொதுக் காலம் 26ஆம் வாரம்
05.10.2024 - சனிக் கிழமை
"தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்" - திருப்பாடல்கள் 4:7
சிலரின் மகிழ்ச்சி சிலருக்கு வருத்தம் அளிக்கிறது. சிலரின் வருத்தம் சிலருக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது.
சில நிகழ்வுகள் நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும். சிலரின் வார்த்தைகள் நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
ஆனால் அதே மகிழ்ச்சி அதே நபரை பிடிக்காத போது வருத்தமாக மாறிவிடும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 10:17-24) இயேசுவால் அனுப்பப்பட்ட 72 சீடர்கள் திரும்பி வந்து இயேசுவிடம் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆண்டவரே உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன என்று தங்கள் மகிழ்ச்சியை இயேசுவோடு 72 சீடர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
இயேசு அவர்களிடம் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றி மகிழுங்கள் என்று சொல்கிறார்.
அற்பமான மகிழ்ச்சி அர்த்தத்தை கொடுப்பதில்லை. ஆனால் இந்த உலகம் எதிர்பார்க்கக் கூடியது, எனக்கு நான் விரும்பும் நேரத்தில் மகிழ்ச்சி கிடைத்தால் போதும் என்பதுதான். தற்காலிக மகிழ்ச்சி தேடி தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இயேசுவின் சீடர்களில் மனநிலை என்பது நாங்கள் இயேசுவின் வார்த்தையை அறிவித்த போது நாங்கள் அதன் பலனை கண்டோம் என்பது அந்த நேரத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.
நான் ஒரு செயலை செய்கிறேன் அதற்கேற்ற பலன் கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சி, இல்லை என்றால் கவலைதான் உருவாகிறது.
இயேசு தொடர்ந்து அவர்களிடம், நீங்கள் காண்பவற்றை காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றை காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்கிறார்.
நம் ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியும் வித்தியாசமானது. எதைக் குறித்து யாரைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறோம் என்பது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொண்டது.
(விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சி நினைத்தது நடந்தால் மகிழ்ச்சி என்பது தான் நம் வாழ்க்கையின் ஓட்டம்.)
இயேசுவின் தலைமைத்துவ அன்பில் இணையக் கூடியவர்கள் இழப்பிலும் மகிழ்ச்சி காண வேண்டும், இறைத்திருவுளத்தை முனைந்து செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இயேசுவின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment