24_10

பலன் கொடுக்க வாய்ப்பு...

பொதுக் காலம் 29ஆம் வாரம்

26.10.2024 - சனிக் கிழமை 

"ஏற்ற காலத்தில் மழையை நான் பெய்யச் செய்வேன். வயல் தன் பலன்களைத் தரும்; நிலத்தின் மரங்கள் தங்கள் கனிகளைத் தரும்" - லேவியர் 26:4

பயன்படாதவர்களை இந்த உலகம் தனிமைப்படுத்திவிடும். சிலரை பயன்படுத்தி தூக்கி எறிந்து விடும் (Use and Throw Culture). உன்னால் எனக்கு ஏதாவது கிடைக்க வேண்டும், அதுவும் இப்போதே கிடைக்க வேண்டும் இல்லையென்றால் உறவு துண்டிப்பு. (இன்றைய குடும்பங்கள் இதற்கு உதாரணம்).

எல்லாருடைய எல்லா தேவைகளையும் நாம் பூர்த்தி செய்துவிட முடியாது. சிலவற்றை நாமே நிறைவேற்றி விடலாம். சிலவற்றை தகுந்த நபர்கள் மூலம் செய்து முடித்து விடலாம். இல்லையென்றால் இயற்கையே அதன் செயலை உரிய காலத்தில் செய்யும். 

வேரோடு பிடுங்கப்பட்டு வேறொரு இடத்தில் நடப்பட்ட நபர்கள் (புதிதாக திருமணமாகி வந்தவர்கள்) புதிய இடத்தில் பலன் கொடுக்க சில காலம் எடுப்பார்கள். நான் விரும்புவதை உடனே செய்யவில்லை என்பதனால் அவர்கள் உதவாக்கரை அல்ல.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:1-9) திராட்சை தோட்டத்தில் நடப்பட்ட அத்திமரம் பலன் கொடுக்காத போது அதை வெட்டிவிட எண்ணுகிறார் தோட்ட உரிமையாளர். தொழிலாளரின் குறுக்கீட்டால் மரத்திற்கு ஓர் ஆண்டு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. பலன் கொடுக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

பயன்படுத்தி தூக்கி எறிவதும்; பயன்படாமலே இருப்பதும் கிட்டத்தட்ட ஒரே குணச் செயலே.

எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நான் பயன்படுத்தவில்லை; மற்றவரை மனிதராக மதிக்கவில்லை என்றால் நான் வீழ்த்தப்படுவது உறுதி.

நான் மனம் மாறாவிட்டால் அழிவது உறுதி. பிறரின் தீய வாழ்விலிருந்து, எதை செய்யக் கூடாது என்ற பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். 

நான் செய்த செயலுக்கு உடனே தண்டனை கிடைக்கவில்லை என்றால் நான் யோக்கியன் என்று அர்த்தமில்லை. எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது. 

திருந்துவதற்கும் பலன் கொடுப்பதற்கும் கொடுக்கப்படும் வாய்ப்பைப் பயன்படுத்துவோம். 

மற்றவரை பயன்படுத்த அல்ல; மற்றவர்களுக்கு பயன் உள்ளவர்களாக இருப்போம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...