24_10

பேறுபெற்ற பனியாளராக...


பொதுக் காலம் 29ஆம் வாரம்

22.10.2024 - செவ்வாய்க் கிழமை 

"அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்" - லூக்கா நற்செய்தி 17:10

”ஒவ்வொரு பதவிக்கும் ஒரு தகுதி தேவைப்படும். மதிப்பு குறைவான பணி என்று கருதப்படுவதெல்லாம் அதிக மதிப்புமிக்கது தான், காரணம் அதில் தான் உழைப்பின் நேரம் அதிகம், வேலை பளு அதிகம். இந்த இடத்தில் வேலை செய்வது போல் நடிக்க முடியாது.

மதிப்புமிக்க பணியென்று அழைக்கப்படுவதெல்லாம் இருக்கும் இடத்தை பொறுத்து மதிப்பு பெறுகிறதே ஒழிய செய்யும் வேலையை வைத்து அல்ல. காரணம் இங்கு வேலை செய்யாவிட்டாலும் ஊதியம் உண்டு. இங்கு வேலை செய்வது போல் நடித்து பதவி உயர்வு பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு பணியாளர் பேறுபெற்றோர் ஆவதற்கு அடிப்படை தகுதி உண்மையுடன் இருப்பதே. தலைவர் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தன் கடமையை செய்பவரே பேறுபெற்ற பணியாளர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12: 35-38) விழித்திருக்கும் பணியாளரை பேறுபெற்ற பணியாளராக இயேசு முன்மொழிகிறார். தலைவரின் வருகைக்காக காத்திருந்து பணிவிடை புரிபவர் பணிவிடை ஏற்கும் நிலைக்கு உயர்வார், அவர் பேறுபெற்றவராவார்.

கொடுக்கப்படும் பணி முக்கியமல்ல; அதை செய்து முடிக்கும் திறனே முக்கியம். எந்த பணியும் தரக்குறைவானது அல்ல. எல்லாம் மதிப்புமிக்கதே.

யாரோ செய்த செயலை தான் செய்ததாக சொல்லி பாராட்டு பெறும் மனிதர் சிறுமையுற்றவர். இது பணியாளருக்குரிய தகுதி அல்ல.

யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நாம் செய்ய வேண்டியதை செய்வோம். அப்போது நாம் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

இடையை வரிந்து கட்டிக்கொண்டு தலைவருக்காக காத்திருப்போம். நம் தகுதி நம் பணியில் வெளிப்படட்டும்... அப்போது நாம் பேறுபெற்ற பணியாளராக கருதப்படுவோம்.



No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...