25_01

விட்டுவிட்டு பின்பற்ற...

பொதுக் காலம் 1ஆம் வாரம்

13.01.2025 - திங்கட் கிழமை 

"அவர் அடிச்சுவடுகளை என் கால்கள் பின்பற்றின; அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை" - யோபு 23:11

ஒரு ஆற்றை கடக்க வேண்டும் என்றால் சுமைகளை விட்டுவிட வேண்டும். ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு செல்ல இறக்கி வைக்க வேண்டியவற்றை இறக்கி வைக்க வேண்டும். சுமைகளோடு தான் கடப்பேன் என்றால் சுமை நம்மை நீரினுள் அமுக்கி விடும்.

உறவை பிரிப்பதற்கு துணையாக இருக்கும் அனைத்தையும் (தீய சொல், செயல்) விட்டுவிட வேண்டும். தேவையற்றவைகளை தூக்கி தலை மேலே போட்டுக் கொண்டால் பாரம் நமக்கு தான்.

இயற்கை நமக்கு ஒரு முன் உதாரணம். மரமோ, செடியோ, விலங்கோ, பறவையோ தன்னிடம் தேவையற்றவையாக இருப்பவற்றை விட்டு விட்டு செல்லும்/நீக்கி விட்டு செல்லும்.

நீக்காவிட்டால், விட்டுவிடாவிட்டால் வளர்ச்சியோ/முன்னேற்றமோ இல்லாமல் போய் விடும்.

தடையாய் இருப்பவற்றை தவிர்த்தால் முன்னேற்றம் தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:14-20) சீமோனையும் அவரது சகோதரரான அந்திரேயாவையும் இயேசு மனிதரை பிடிக்க அழைக்கிறார். அவர்களும் தங்கள் வலைகளை விட்டுவிட்டு அவரை பின்பற்றினார்கள். சற்று அப்பால் யாக்கோபையும் யோவானையும் கண்டு அவர்களையும் அழைத்தார். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவை கூலியாட்களோடு படகில் விட்டுவிட்டு இயேசு பின் சென்றார்கள்.

இவர்கள் நால்வரும் இருப்பவற்றை, தங்கள் வாழ்வுக்கு ஆதாயமாக இருப்பவற்றை விட்டுவிட்டார்கள், இயேசுவை பின்பற்றினார்கள்.

இல்லாததை இழப்பது அல்ல சீடத்துவம், இருப்பவற்றையெல்லாம் விட்டுவிடுவது/இழப்பது தான் உண்மையான சீடத்துவம்.

இயேசுவை பின்பற்ற வேண்டுமென்றால் இவ்வுலக பற்றை விட்டுவிட வேண்டும் 

இவ்வுலக செல்வத்தை, புகழை விட்டுவிட வேண்டும் 

போலியான வாழ்க்கையை விட்டுவிட வேண்டும் 

ஆடம்பரத்தை விட்டுவிட வேண்டும் 

இவ்வாற்றையெல்லாம் விட்டுவிடவில்லை என்றால் இயேசுவை பின்பற்றுவதை விட்டுவிட வேண்டும்.

எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...