25_01

தீய அதிகாரத்தை அதட்ட வேண்டும்...


பொதுக் காலம் 1ஆம் வாரம்

14.01.2025 - செவ்வாய்க் கிழமை 

"உன்னிடம் உயிர் உள்ளவரை, மூச்சு இருக்கும்வரை, மற்றவர்கள் உன்மீது அதிகாரம் செலுத்த விடாதே" - சீராக்கின் ஞானம் 33:21

வாயை திறக்க வேண்டிய இடத்தில் வாயை திறக்க வேண்டும். வாயை மூடி இருக்க வேண்டிய இடத்தில் வாயை மூடி இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் பேசுவது தவறு, அதே வேளையில் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் தவறு. 

ஆணவ அதிகாரமிக்க மனிதர்களிடத்தில் அடங்கி போவதும் பாவப்பட்ட மனிதர்களிடம் அதிகாரம் செலுத்துவதும் தேவையில்லாதது.

சிலரின் வாயை சொல்லி மூடலாம், சிலரின் வாயை எதை சொன்னாலும் மூட முடியாது. சாதித்து காட்டும் போது சிலரின் வாய் தானாக அடங்கி போய்விடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:21-28) தொழுகைக் கூடத்தில் இயேசு அதிகாரத்தோடு போதித்தார். அந்த நேரத்தில் தீய ஆவி பிடித்த ஒருவர் அவரிடம் வந்து, 'நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்கு தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்று கத்தியது. (தீய ஆவி கூட உண்மையை பேசுகிறது)

வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ என்று இயேசு அதனை அதட்டினார். (இயேசுவுக்கு புகழ்ச்சி தேவையில்லை, முழு மனித விடுதலை தான் தேவை).

தேவையற்றவைகளை பேசும் போதும்/ தேவையுள்ள நேரத்தில் பேசாமல் இருக்கும்போதும் நாம் தேவையில்லாதவர்களாக மாறி போவோம். 

சரியானதை சரி என்று சொல்ல வேண்டும். தவறை தவறென்று சுட்டிக் காட்ட வேண்டும். இயேசு தனது அதிகாரத்தை எல்லா இடங்களிலும் காட்டவில்லை மாறாக, அதிகாரம் எங்கெல்லாம் தலை தூக்கியதோ அங்கெல்லாம் இயேசு கிறிஸ்து அதிகாரத்தை பயன்படுத்தினார்.

அதிகாரம் கொண்ட போதனையினாலும் நல்லது பல செய்தார்.

நம்முடைய அதிகாரம் மற்றவர்களை ஆட்டிப் படைக்க அல்ல மற்றவர்களை ஆற்றல் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

இயேசுவின் தோழமையில் பங்கெடுத்து தீய ஆதிக்கத்துக்கு எதிராக அணி திரள்வோம். இயேசுவின் அதிகாரத்தை கையில் கொண்டு அடக்குமுறைகளை அடிதொழிப்போம்...

(இன்று மறைசாட்சி புனித தேவசகாயம் விழா)

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...