25_01

திருமுழுக்கு யோவானின் மனநிலையை பெற்றிட


கிறிஸ்து பிறப்புக் காலம் 

02.01.2025 - வியாழக் கிழமை 

"கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" - பிலிப்பியர் 2:5

நான் செய்யக் கூடிய செயலுக்கு ஏற்ற கைம்மாறு எனக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்பது எல்லா சாதாரண மனிதர்களின் எதிர்பார்ப்பு. நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு செயலையும் ஏதாவது எதிர்பார்ப்போடு தான் செய்கிறோம். 

ஆனால் சில மனிதர்கள் தாங்கள் செய்வது அடுத்தவருக்கு, நன்மை பயப்பதாக இருந்த போதிலும் தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். எந்தவொரு பெருமையையும் தேடுவதில்லை. இத்தகைய மனிதரை காண்பது அரிது.

மக்கள் பார்க்க வேண்டும் என்று அறச் செயல் செய்வோரும் உண்டு, யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் தங்கள் கடமையை செய்து மகிழ்வோரும் உண்டு. இதில் நாம் எத்தகைய மனநிலை உடையவர்கள்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 2:19-28) ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் என்ற குரலின் சொந்தக்காரர் பற்றி காண்கிறோம். திருமுழுக்கு யோவான் மீட்பரை குறித்து அறிவித்த போதும் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. 

நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறேன்... எனக்குப்பின் வருபவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்று சொல்லி தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார்.

நான் ஒன்றுமில்லை என்ற மனநிலை எல்லோருக்கும் எளிதாக வந்து விடாது. நாம் செய்ததை நாமே தம்பட்டம் அடிக்க கூடாது. மற்ற மனிதர்கள் நம்மை குறித்து அவர்களாகவே பேசும்படி வாழ வேண்டும்.

அதற்கு நம்மை தாழ்த்திக் கொள்ளும் மனநிலையை பெற்றுக் கொள்ள வேண்டும். 

இறைத்திருவுளத்தை மக்கள் அறிய செய்தார், தனது வாழ்வால்/வார்த்தையால்.

திருமுழுக்கு யோவான் மீட்பரை அறிவித்தார்; அவரிடம் துளியெனும் ஆணவம் இல்லை...

தகுதியுள்ளவராக இருந்த போதிலும் தன்னை தகுதியற்றவராக கருதினார். 

நாமும் இத்தகைய மனநிலையை பெற்றிட வேண்டும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...