24_11

மன்னிப்பும் நம்பிக்கையும்


பொதுக் காலம் 32ஆம் வாரம்

11.11.2024 - திங்கட் கிழமை 

எல்லா மனிதரும் பலவீனமானவர். எல்லோருக்குள்ளும் ஊனியல்பின் போராட்டம் இருக்கிறது. (ஆனால் அந்த பலவீனத்திலே வீழ்ந்துக் கிடப்பதும் தவறு தான்).

சபை உரையாளர் 7:20 இவ்வாறு சொல்கிறது, " குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை". இதன் பொருளை இப்படியும் புரிந்துக் கொள்ளலாம், தன்னை நேர்மையானவர் என்று காட்டுபவர் நேர்மையானவராக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். மேடு பள்ளம் எல்லாருடைய வாழ்விலும் உண்டு. நேர்மையானவர் கூட சில தருணங்களில் தன் சார்பாய் உள்ளவருக்காக நேர்மை என்னும் ஆடையை கழற்றி விடுகிறார். விலைபேசப்பட்டு விடுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக (லூக்கா 17:1-6) தவறு செய்பவர்களை கண்டிக்கவும், அவர்கள் மனம் மாறினால் மன்னிக்கவும் அழைக்கப்படுகிறோம். அதே நேரத்தில் நம்முடைய நம்பிக்கை மிகுதிப்படுத்தபடவும் வேண்டும். 

பாவச் சோதனை எல்லோருக்கும் வரும். ஆனால் அந்த பாவச் சோதனையினால் மற்றவரை பாவத்தில் வீழ்த்தக் கூடாது. நல் வழியிலிருந்து தவறுவதும் மற்றவரை நல்வழியிலிருந்து தடம்புரள செய்வதும் தவறு.

என்னிடம் இருக்கும் நல்லதை நான் பகிர வேண்டும். ஒருபோதும் மற்றவர் வாழ்வை சீர்குலைக்கும் செயலை செய்ய கூடாது.

ஒருவரை நாம் மன்னிக்கின்ற போது இரண்டு வகையான நலமளிக்கும் காரியம் நடைபெறுகிறது. 

1. மன்னிக்கும் நாம் பூரண நலம் பெறுகிறோம். (பகை மறைகிறது, பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் மறைகிறது)

2. மன்னிப்பு பெறுபவர் நம்பிக்கை என்னும் புது வாழ்வு பெறுகிறார். (வாழ்வில் புதிய திருப்பம்)

மன்னிப்பை பகிரும் நாம் மற்றொருவருக்கு நம்பிக்கை என்னும் வாழ்வுக்கான புது வழியை திறந்து வைக்கிறோம்.

மன்னிப்பவர் கடவுளாகிறார். மன்னிப்பு பெறுபவர் கடவுளை அணுகி செல்கிறார். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...