24_11

பலன் கொடுக்கும் பயனற்ற பணியாளர்...


பொதுக் காலம் 32ஆம் வாரம்

12.11.2024 - செவ்வாய்க் கிழமை 

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள்" - 2 கொரிந்தியர் 6:8

பணியாளரின் பணி என்ன? பணி செய்து கொண்டே இருப்பது. எந்தவொரு பணியாளர்களும் தலைவர் உணவு அருந்தும் முன்னே தான் உணவு அருந்துவதில்லை. ஒருவேளை தலைவருக்கு முன்னே அவர் தன் வயிறை நிரப்பினால் அவர் வேலை காலியாகும். 

இது அடிமைத்தனமாக இருந்தாலும் பணியாளரின் கடமையாக இருக்கிறது. இதே செயல்பாட்டை ஒவ்வொரு தாய்க்கும் பொருத்தி பார்க்கலாம். எவ்வளவு தான் அன்போடும் பரிவோடும் உணவை பரிமாறினாலும் பயன் என்னவோ தாயை சென்று சேர்வதில்லை. ஒரு பணிப்பெண்ணாகவே திருமணமான பெண்கள் பார்க்கப்படுகிறார். 

எல்லா பணிகளும் செய்து முடிக்கப்பட்ட பின்னர் எதிர்ப்புறம் இருந்து வரும் கேள்வி... நீ வீட்டுல என்ன செஞ்ச? செய்யுற? ஒருவேளையும் உருப்படி இல்லை. 

இப்படி எல்லா எதிர்மறை வார்த்தைகள் தூவப்பட்டாலும் எந்தவொரு தாயும் தனது கடமையை/பணியை செய்யாமல் இருப்பது இல்லை.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 17: 7-10)   நாம் காணும், "நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.” என்ற இறைவார்த்தை கடமை உணர்வோடு பணி செய்யும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். 

பலன் எதிர்பார்த்து பணி செய்யும் பலருக்கு மத்தியில் எந்தவொரு பாராட்டுதலையும் விரும்பாது பணி செய்யும் மனது பாராட்டுதற்குறியது.

யார் என்ன சொன்னாலும், யார் என்ன செய்தாலும் பரவாயில்லை என் கடமை எனக்கு முக்கியம் என்று செயல்பட ஆரம்பித்தால் இங்கு பணி தேக்கங்கள் ஏது? 

சரியானவற்றை சரியான நேரத்தில் செய்து விட வேண்டும். சரியென்பதை சரி என்று சொல்லி விட வேண்டும்.

விளக்கு (வெளிச்சம்)  இல்லாத/ திசை காட்டும் கருவி இல்லாத இரவு பயணம் வழிமாறும். அதுபோல இலக்கு இல்லாத பணி வாழ்வு திசை மாறும்.

நாம் அனைவரும் பயனற்ற, அதே வேளையில் பலன் கொடுக்கும் பணியாளர்கள். மற்றவர்களின் இகழ்ச்சியும் சரி புகழ்ச்சியும் சரி நம் பணிக்கு தடையாக இருக்க கூடாது.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...