24_11

விட்டுவிட வேண்டும்...


பொதுக் காலம் 31ஆம் வாரம்

06.11.2024 - புதன் கிழமை 

அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர்புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்" - 1 பேதுரு 2:11

வாழ்க்கையில் விட்டுவிட வேண்டியவற்றை விட்டுவிட வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

படகு மூழ்க ஆரம்பிக்கும் போது படகில் இருக்கும் எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும். படகில் இருக்கும் பொருளை விட்டுவிடவில்லையென்றால் உடலில் இருக்கும் உயிரை விட வேண்டி இருக்கும்.

திட்டம், செயல், தீர்வு இவை தான் நமது இலக்காக இருக்க வேண்டும். திட்டமிடாத செயல்முறைகள் சரியான தீர்வைக் கொணராது.

தேவையற்றவைகளை விட்டுவிட்டால் தேவையானது வந்து சேரும். அது உறவுகளாக/பொருளாக இருக்கலாம்/மனக்கவலையாக இருக்கலாம்... நமக்குரியது ஒருநாள் நிச்சயம் நம்மை வந்து சேரும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் (லூக்கா 14:25-33) இயேசுவின் சீடராக சிலவற்றை விட்டுவிட வேண்டி இருக்கிறது, சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. உறவுகள்/உயிரை கடவுளை விட மேலாகக் கருத கூடாது, அவரவர் சிலுவையை சுமக்க வேண்டும், ஒன்றை செய்வதற்கு முன் திட்டமிட வேண்டும், உடைமைகளை விட்டுவிட வேண்டும்.

இவ்வுலக வாழ்வுக்கு எதுவெல்லாம் முக்கியமாக தென்படுகிறதோ அவையெல்லாம் விண்ணக வாழ்வுக்கு முக்கியம் அல்ல. 

குப்பைகளை தூக்கி மேல போட்டுக் கொண்டால் துர்நாற்றம் நமக்கும் நம் அருகில் இருப்பவர்களுக்கும் தான். கழிவுகளை அகற்ற வேண்டும்/தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும்.

இயேசுவின் பணியில் இணைய தடைகள் இருப்பின் அதை உடைக்க வேண்டும். ஒன்றை இழப்பதன் வழியாக மற்றொன்றை பெற்றுக் கொள்ள முடியும். 

சிலர் இறக்கி வைக்க வேண்டிய சுமைகளை தோளில் ஏற்றி வைக்கிறார்கள். பழிவாங்குதல், ஆணவம், வீண் பெருமை, அதிகாரம் போன்றவை தூக்கி எறியப்பட வேண்டும். இவை நமக்குள் இருந்தால் இயேசுவின் சீடராகும் தகுதி நம்மைவிட்டு போய்விடும்.

தகுதியற்ற நம்மை தகுதிப்படுத்தியவரோடு இணைய தகுதியற்ற இவ்வுலக செல்வங்களை விட்டுவிடுவோம். 

சீராக்கின் ஞானம் 13:2 சொல்வது போல நாம் வாழ வேண்டும், "உன்னால் சுமக்க முடியாத சுமைகளைத் தூக்காதே; உன்னைவிட வலிமை வாய்ந்தோருடனும் செல்வம் படைத்தோருடனும் உறவு கொள்ளாதே. மண்பானைக்கும் இரும்புக் கொப்பரைக்கும் என்ன தொடர்பு? கொப்பரையுடன் பானை மோதிச் சுக்குநூறாகும்."

இவ்வுலக செல்வத்தின் மீதான பற்று அவ்வுலக வாழ்வை கெடுத்து விடும்.

தேவையற்றவைகளை விட்டுவிட்டு பற்று அற்ற வாழ்க்கை வாழ்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...