24_11

விண்ணக விருந்துக்கு தயக்கம் வேண்டாம்...

பொதுக் காலம் 31ஆம் வாரம்

22.08.2024 - செவ்வாய்க் கிழமை 

"நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது" - 1 கொரிந்தியார் 10:21

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 14:15-24) விண்ணரசானது திருமண விருந்துக்கு ஒப்பிடப்படுகிறது. திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களோ தகுதியற்று போனார்கள். அழைக்கப்பட்டவர்கள் பலராக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிலராக இருந்தனர் என்பதை நற்செய்தி வாசகம் தெளிவுப்படுத்துகிறது. 

விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வராமல் இருக்க பல காரணங்களை சொல்லிக் கொண்டே சென்றார்கள். ஒருவர் வயலுக்கு சென்றார், ஒருவர் ஏர் மாடுகளை ஓட்டிப் பார்க்க சென்றார், புதிதாக திருமணம் ஆகி இருந்ததால் ஒருவரால் வர முடியாது என்றார்.

மேலோட்டமாக, இன்றைய நற்செய்தி வாசகத்தை பார்க்கின்றபோது திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வரவில்லை. ஏன், தலைவர் சினமுற வேண்டும்? என்று தோன்றலாம். 

ஆனால், இங்கு இந்த திருமண விருந்து என்பது இறையாட்சியின் விருந்து. இயேசு தரும் விண்ணக விருந்துக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அழைப்பை நிராகரித்து, இவ்வுலக வாழ்விலே இன்பம் காண எண்ணுகிறார்கள் என்பதைத்தான் மேலே காரணங்களை சொல்லும் மனிதர்களை வைத்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது. (நாம் இந்த உலகின் நிரந்தர குடிகள் அல்ல. நமக்கு மேலொரு வாழ்வு உண்டு).

வாய்ப்பு ஒரு தடவை தான் கதவை தட்டும் என்பார்கள். தட்டும் போதே திறக்க வேண்டும், இல்லையென்றால் வாய்ப்பு நம்மை கடந்து சென்றுவிடும். 

வீதி, வழியோரங்களில் காணும் எல்லோரையும் திரும்ப விருந்துக்கு அழைத்து வரச் சொல்கிறார் தலைவர். அப்படி அழைக்கப்பட்டோரில் நல்லோர், தீயோரால் திருமண மண்டபம் நிரம்பியிருந்தது. அந்த அழைப்பின் வழியாக அவர்கள் மனமாற வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

தகுதியற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், தகுதியுடையோர் ஆனார்கள், திருமண விருந்தில் கலந்து கொண்டார்கள்.

நாம் விண்ணரசில் நுழைய அழைப்பு (மனமாற்றத்திற்கான அழைப்பு) கொடுக்கப்படுகிறது.

தகுதியற்ற நிலையில் இருந்து நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது தான் விண்ணரசிற்கான நுழைவு சீட்டு.

சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்துவதை விட 'இதோ வருகிறேன்' என்று பதில் கொடுப்போம். 

வார்த்தையும் வாழ்வும் இணைந்து பயணிக்கட்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...