24_12

சிலுவையை ஏந்தியவர் புனித சிலுவை ஜான்


திருவருகைக் காலம் 2ஆம் வாரம்

14.12.2024 - சனிக் கிழமை 

"சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" - 1 கொரிந்தியர் 1:18

எதுவெல்லாம் நம் வாழ்வின் சிலுவையாக இருக்கும்?

ஏழ்மை, நம் பணியை மற்றவர்கள் அங்கீகாரம் செய்யாதது, நிராகரிப்பு/கண்டுக் கொள்ளாமை, வருந்தி உழைப்பது, தனிமை, இடையூறு இவை போன்ற பல காரியங்கள் நமக்கு சிலுவையாக தோன்றலாம்.

ஒவ்வொருவர் ஏற்றுக் கொண்ட சிலுவையும் ஒருவர் மற்றவரிடமிருந்து மாறுபடுகிறது. புனிதர்கள் வாழ்க்கையை பார்க்கின்ற போது அந்த சிலுவை கூட அவர்கள் வாழ்வில் சுகமாக இருந்துள்ளது.

1 பேதுரு 4:12,13இல் இவ்வாறு சொல்கிறது, "அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்".

நாம் அனுபவிக்க கூடிய துன்பம் நாம் "...கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாக இருக்கக் கூடாது" (1பேதுரு 4:15) என்கிறார் திருத்தூதர் பேதுரு.

இன்றைய நாளில் தாய்த் திருஅவை சிலுவையின் புனித ஜானை நினைவுக் கூறுகிறது. தான் சார்ந்து இருந்த கார்மல் துறவற சபையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். இணைந்து பணியாற்றியவர்களே எதிர்த்தார்கள், சிறையில் அடைத்தார்கள்.

இவர் தன்னுடைய சபைக் குருக்களிடம் இவர் வலியுறுத்திய செய்திகள் இரண்டு, 1. எல்லாவற்றையும் துறந்து வாழ்வது 2. அளவற்ற அன்பு.

இதை விரும்பாதவர்கள் இவரிடமிருந்து பிரிந்து சென்றார்கள். நாட்கள் செல்லச் செல்ல இவர் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டார்.

காலில் ஏற்ப்பட்ட புற்று நோய் உடல் முழுவதும் பரவியது. தன் வாழ்நாள் முழுவதும் துன்பங்களை அனுபவித்த இவர், கையில் சிலுவையை எந்தியவராய் "ஆண்டவரே! உம்முடைய கையில் என்னுடைய ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று கூறி உயிர் துறந்தார்.

துன்பம் வந்ததும் பலர் நேர்மைத்தனத்தில் இருந்து விலகி விடுவர். நன்மையை மறுத்து தீமை செய்ய ஆரம்பித்து விடுவர்.

அதற்கு காரணம், "நன்மைக்கு ஏற்ற கைம்மாறு உண்டு" என்பதை அவர்கள் அறியாத காரணத்தால் தான். 

தீமை வந்தாலும் சிலுவையை கையில் ஏந்தி நன்மைக்கு சான்று பகர முயல்வோம்...

இறப்பு எல்லோருக்கும் உண்டு. இறப்புக்கு முன் இழப்பும் உண்டு. வாழும் வாழ்க்கையை தகுதியுடன் வாழ்வோம்.

இறுதிவரை உண்மைக்கு சான்று பகர்ந்து தலை நிமிர்ந்து நிற்போம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...