24_12

அதிகாரம் எங்கிருந்து வருகிறது?


திருவருகைக் காலம் 3ஆம் வாரம் 

16.12.2024 - திங்கட் கிழமை 

"ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே" - சாலமோனின் ஞானம் 6:3

அதிகாரம் கொடுக்கப்பட்டதா? அல்லது எடுக்கப்பட்டதா? சில மனிதருக்கு அதிகாரம் கொடுக்கப்படுகிறது, சில மனிதர்கள் தாங்களாகவே அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். 

ஆணவமிக்க அதிகாரம் ஆபத்தில் போய் முடியும். அடக்கி ஆள நினைக்கும் அனைவரின் இறுதி கால வாழ்வு, கேள்விக் குறி தான். பிறருக்கு செய்ததை எண்ணி வருந்த வேண்டி இருக்கும்.

ஆணவம் மேலோங்கும் போது ஆபத்துக்கான பாதை  திறந்து வைக்கப்படுகிறது. குழி என்று தெரிந்து யாராவது பள்ளத்தில் விழுவார்களா? நிச்சயமில்லை. ஆனால் இன்று ஆணவத்தின் கதவுகளை திறந்து வைத்திருக்கின்றோம், அதன் கடைசி பகைவன் நாம் என்பதை அறியாமல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 21:23-27) இயேசுவின் அதிகாரத்தை தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் கேள்வி கேட்கிறார்கள். அவர்களை மடக்கி பிடிக்க இயேசு ஒரு கேள்வியை திருப்பி கேட்க அவர்கள் அடங்கி போகிறார்கள். கேள்வி இது தான், யோவானுக்கு திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மண்ணகத்திலிருந்தா?

பதில் சொல்ல தெரியாத காரணத்தால் வாயடைத்து நின்றார்கள்.

இன்று பலர் மனிதர்கள் தங்களுக்கு தான் எல்லாம் பேசத் தெரியும் என்று எண்ணுகிறார்கள். தேவையற்ற வார்த்தைகளை தங்களின் அதிகாரத்தினால் மக்கள் மீது தூவி விடுகிறார்கள்.

அதிகாரம் ஆட்டிபடைக்க அல்ல, பிறருக்கு நல்லது செய்ய தான். மக்களால் உயர் பதவியை அடைந்தவர்கள் மக்களையே ஆட்டி படைப்பது நியாமல்ல.

இயேசுவின் அதிகாரம் பணிவில் வெளிப்பட்டது. இயேசுவின் அதிகாரம் மனிதர்களிடமிருந்து அல்ல மேலிருந்து வந்தது. 

நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையும் மேலிருந்து அருளப்பட்டதே. திருமுழுக்கு பெற்றதன் வழியாக நாமும் கிறிஸ்துவின் அதிகாரத்தில் பங்கு பெறுகிறோம். 

நம் அதிகாரத்தினால் மற்றவர் ஒரு போதும் வீழ்ந்து போக கூடாது, வாழ்ந்து காட்ட வேண்டும். மேலிருந்து கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சரியான வழியில்/முறையில் பயன்படுத்துவோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...