24_12

வழிதவறிய/தொலைந்து போன ஆட்டைத் தேடி...


திருவருகைக் காலம் 2ஆம் வாரம்

10.12.2024 - செவ்வாய்க் கிழமை 

யார் தேடப்படுவார்?

காணாமல் போனவர் தேடப்படுவார். (காணாமல் போனவர் பற்றிய விபரம், கண்டுப் பிடித்து தாருங்கள்). 

வீட்டில் இல்லாதவர் தேடப்படுவார். வீட்டுக்கு வருகின்ற நபர், வீட்டினுள் இருக்கும் நபரை தேடமாட்டார். யார் வீட்டினுள் இல்லையோ அவர்களை தான் தேடுவார்கள். (அவுங்க எங்க போனாங்க? எப்போ போனாங்க? எப்போ வருவாங்க? என்று தேடுவார்கள்). இருப்பவர்கள் தேவையில்லை என்பதல்ல, இல்லாதவர்களும் தேவை என்பதனால் தான்.

இன்று பல்வேறு நபர்கள் வீடுகளில் இருந்து, உறவுகளில் இருந்து, உணர்வுகளில் இருந்து பிரிந்து/தொலைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இருப்பதை தொலைத்து இல்லாத ஒன்றை தேடி தொலைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். 

தொலைந்து போனவர்களை பலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கண்டுபிடிக்கப்பட்டு விடுகின்றனர், பலர் கைவிடப்பட்ட நிலையிலே இருந்து விடுகின்றனர்.

இன்று நாமும் ஏதோ ஒரு வகையில் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 18:12-14) காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்கிறார் ஆயன். தன்னிடம் இருக்கும் 99ஆடுகளை விட தொலைந்து போன 1 ஆட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

தேடப் போகிற தருணத்தில் மற்ற 99 ஆடுகள் தொலைந்து விடுமோ என்ற அச்சம் ஆயனுக்கு இல்லை. ஒருவேளை அவை தொலைந்து போக எண்ணியிருந்தால் என்றோ அவை தொலைந்து போயிருக்கும். எனவே 99 ஆடுகளை விட்டு விட்டு பாதுகாப்பற்ற சூழலில் தத்தளிக்கும் ஆட்டை தேடிச் செல்கிறார் ஆயன்.

இன்று நமக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. வழி தவறியோரை கரைசேர்க்க, தொலைந்து போனவர்களை மீட்டெடுக்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது.

மகிழ்ச்சி, இருப்பதில் கிடைப்பதை விட இழந்ததை திரும்ப பெறுவதில் இருக்கிறது. 

மற்றொரு வகையிலும் மகிழ்ச்சி உண்டு, வாழ்வு இழந்து போனவர்களுக்கு வாழ்வு அளிப்பதிலும்/கொடுப்பதிலும்.

நாம் ஒருவேளை இழந்து போகாமல் இருக்கலாம், ஆனால் இழந்து/தொலைந்து போனவர்கள் நம்மிடம் ஏராளம் இருக்கிறார்கள். 

தொலைந்து போனவர்களை தேடிச் செல்வோம். இழந்து போனதை திரும்ப பெற்றுக் கொடுப்போம். (இழந்தது உறவாக, உணர்வாக, வாழ்வாக, அன்பாக, மதிப்பாக, பணமாக என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்).

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...