24_12

தன்னை இழந்து இறையை வெளிப்படுத்தியவர் புனித சவேரியார்...


03.12.2024 - செவ்வாய்க் கிழமை 

நிகழ்வியல்...

புனித சவேரியார் கிழக்காசிய நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க புறப்பட்ட தருணத்தில் அவருடைய அவரை அணுகி, நீர் மேற்கொள்ளக் கூடிய பயணம் தொலைத் தூர பயணம். அதற்கு முன் உன் தாயை சந்தித்து விட்டு செல் என்று சொன்னார். அதற்கு புனிதரோ, 'நான் இறந்து விண்ணகம் போவேன் அல்லவா! அப்போது என்னுடைய அன்னையை அங்கு பார்த்துக் கொள்வேன் என்று சொன்னாராம்'.

வாழ்வியல்...

பணியில் தடை, தடுமாற்றம், இடர் வந்த போதிலும் துவண்டு போகவில்லை, பின்வாங்கவில்லை. தன்னிடம் இருப்பதை துறந்து, தனக்கு நேரடியாக எந்த பயனும் இல்லை என்றாலும் நற்செய்தி பணி செய்ய புறப்பட்டார் நம் புனிதர்.

பணிவாழ்வில் பல சவால்கள் ஏற்பட்டது. காலச் சூழலில் மாற்றம், உணவு, உடையில் மாற்றம், கலாச்சார மாற்றம், மொழி தெரியாது, தொலைத் தூர பயணம் என பல இடர்கள் முன்னிருந்தாலும் இறையை முன்னிலைப்படுத்த தன் நலனை பின்னுக்கு தள்ளினார்.

இன்று பலர் புனித சவேரியாரை நம்பிக்கையின் ஞான தகப்பன், நம்பிக்கையை விதைத்தவர், நற்செய்தியின் போதகர் என்று தூக்கி பிடிக்கிறார்கள். ஆனால் அவருடைய வாழ்வியலை விட்டுவிடுகிறார்கள்.

இந்த உலகம் ஒருவருவருடைய வெற்றியை மட்டும் கொண்டாட தயாராய் இருக்கும். அந்த வெற்றிப் படிகட்டை அடைய அவர் இழந்த, தியாகம் செய்த, பணியாற்றிய முறைமைகளை கண்டுக் கொள்ளாது விட்டு விடுகிறது. 

இங்கு நமக்கு தேவைப்படுவது கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் தான். நாம் சந்திக்கும் திருவிழா, பெருவிழாக்களில் ஆடம்பர கொண்டாட்டங்கள் தேவைப்படுகிறது, கடன் வாங்கியாவது திருவிழா செலவுகளை மேற்கொண்டு விடுகிறோம், தேவையில்லாத காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், வழிபாட்டில் ஆலயத்தின் வெளியே நின்று வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறோம். இது தான் நாம் பழகிப் போன திருவிழாக்கள்.

ஆனால் புனித சவேரியார் அதை நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. மறத்துப்போன மனிதம் மறைய வேண்டும், மனிதாபிமானம் பெருக வேண்டும், கிறிஸ்துவை வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

இனம், மொழி, கலாச்சாரம், கடந்து ஒன்றும் தொடர்பில்லாத மனிதர்களிடையே மறைப்பணி ஆற்றியவர் தான் நம் புனிதர். சவேரியாரின் பயணங்கள் இறைநம்பிக்கையை விதைத்தது, பலம் இழந்த கைகளையும் கால்களையும் திட மூட்டியது, தளரா மனதுடன் வாழ அழைப்பு விடுத்தது.

புனிதரை கொண்டாட வேண்டும் என்றால் புனிதரின் வாழ்க்கை முறை வாழப்பட வேண்டும். 

புனிதரின் வாழ்வில் சுவாரஸ்ய நிகழ்வுகள்...

1. சிலுவையை தொலைத்த சவேரியாருக்கு நண்டு சிலுவையை கொண்டு வந்து கொடுத்தது. 

2. கோவாவில் இறங்கிய போது பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்களுக்கு மறையை கற்றுக் கொடுத்தார்.

3.மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்து கொடுத்து கை மரத்துப்போனது.

4. போர்ச்சுகல் படையின் உதவியோடு மக்களின் வாழ்வுக்கு இடையூறாய் இருந்த முகமதியர்களை விரட்டியடித்தார். பலர் திருமுழுக்கு பெற்றனர்.

5. மக்களின் பண்பாட்டை, மொழியை உள்வாங்கினார். கையில் மணியும் சிலுவையும் வைத்துக் கொண்டு மறைப்பரப்பு பணி செய்தார்.

6. பல்வேறு புதுமைகளை செய்தார்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...