24_12

நல்லது வெளிப்படட்டும்...


திருவருகைக் காலம் முதல் வாரம் 

06.12.2024 - வெள்ளிக் கிழமை 

"வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை" - மத்தேயு 10:26

இந்த உலகில் எதுவும் மறைவாய் இல்லை. எல்லாம் வெளிப்படையாய் இருக்கிறது. கொரோனா காலத்திற்கு பிறகு எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டப்பட இணையதளம் உதவிவிட்டது. மறைவில் இருந்தவையெல்லாம் திரையின் வழியாக வீட்டை வந்து சேர்ந்துக் கொண்டே இருக்கிறது.

யாரும் யாரையும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் வெளிப்படுத்தப்பட வேண்டியவை வெளிப்படுத்தப்படுவதில் ஒன்றும் தவறில்லை. உதவி, பகிர்வு, கரிசனை இவை போன்ற சேவைகள் திரை வழியாக மற்றொருவரை வந்து சேருகிற போது அது மற்றொருவருக்கு தூண்டுதலாக இருக்கும்.

நல்லது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதனால் மற்றவர்களும் நல்லது செய்ய தூண்டப்பட வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9:27-31) பர்வையற்றோருக்கு கண் பார்வை கொடுத்த பிறகு, "இதை யாரும் அறியாதப்படி பார்த்துக் கொள்ளுங்கள்" என்று பார்வை பெற்றவர்களை பார்த்து சொல்கிறார் இயேசு.

தான் செய்த நன்மையை கூட இயேசு வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதற்கான மறைமுக காரணங்கள் இரண்டு சொல்லலாம், 1. புதுமைக்காக மட்டும் இயேசுவை பலர் தேடலாம். 2. நற்செய்தி அறிவிப்புக்கு அது தடையாக இருக்கலாம்.

ஆனால் நன்மையை பெற்றவர்கள் இயேசுவை பற்றிய செய்தியை வெளிப்படுத்தி விட்டனர்.

இந்த நற்செய்தியில் புதுமை செய்வதற்கு முன், "நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா? என்ற கேள்வியை முன் வைக்கிறார் இயேசு. ஆம் ஐயா என்பது அவர்களின் பதில். இருவரின் நம்பிக்கை நல்லது நடைபெற/ இயேசு தன்னை வெளிப்படுத்த காரணமாய் அமைந்தது.

நம் வாழ்விலும் நம்மில் இருக்கும் நன்மை வெளிப்படட்டும்... நம்பிக்கை என்னும் ஒளி கீற்று நம்மிலிருந்து புறப்படட்டும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...