24_12

உணர்வுகளை புரிந்து உணவு கொடுத்தார் இயேசு...


திருவருகைக் காலம் முதல் வாரம் 

04.12.2024 - புதன் கிழமை

"எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக" - திருப்பாடல்கள் 22:26 

ஒருவேளை உணவுக்காக அரும்பாடுபடும் மனிதர்கள் நம்மில் உண்டு. ஒருவேளை உணவு மட்டும் உண்டு படுக்கைக்கு செல்லும் பாமரரும் நம்மில் உண்டு.

அதே வேளையில் உணவு திருவிழா என்ற பெயரில் உணவுகள் வீணடிக்கபடுகின்றன. இருப்பவர்கள் இல்லாதவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காதது தான் இங்கு பிரச்சினை. 

உணவு நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது. உணவு சரியில்லை என்பதற்காக எத்தனை திருமணங்கள் கலவரத்தில் முடிந்திருக்கிறது! முறையாக பந்தியில் கவனிக்கபடவில்லை என்று புலம்பி தள்ளியவர்கள் எத்தனை பேர் நம்மில் உண்டு!

உணவு பரிமாறப்படும் இடங்களில் உணர்வு முக்கியத்துவம் பெறுகிறது. உணர்வை புரிந்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.

இருப்பது பழைய சோறாக இருந்தாலும் அது தேவை அறிந்து கொடுக்கப்பட வேண்டும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 15:29-37) இயேசு உணர்வுகளை புரிந்துக் கொண்டு உணவளித்தார். நோயாளிகளை குணமாக்கினார். தன்னோடு மூன்று நாட்கள் தங்கி இருந்த மக்கள் கூட்டத்தின் மீது பரிவுக் கொள்கிறார்.

தன்னை தேடி வந்தவர்களை பட்டினியாய் அனுப்பிவிட அவர் விரும்பவில்லை. 7அப்பங்கள் சில மீன்களை கொண்டு உணவளிக்கிறார். 

கொடுப்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கொடுப்பதற்கு மனம் தான் வேண்டும்.

சீடர்களின் மனநிலை, இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?

நிறை உள்ளத்தோடு கொடுக்கிற போது நாம் நிறைவாய் பெற்றுக் கொள்ள முடியும் என்பது இன்றைய நற்செய்தி வெளிப்படுத்தும் உண்மை. 

போதுமான உணவு எங்கிருந்து கிடைக்கும்? என்று கேட்டவர்கள், இறுதியில் இருந்த துண்டுகளை 7 கூடைகள் நிறைய எடுத்தனர்.

நம்மோடு இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முயலுவோம். சிலர் நாம் செய்த செயலுக்கு நன்றி உள்ளவர்களாய் இருப்பார்கள், பலர் நம்பிக்கை துரோகம் செய்வார்கள். 

நாம் இங்கு நம்மை அல்ல, இயேசுவைப் பிரதிபலிப்போம்.

இருப்பதை பகிர்வோம்... இருக்கும் வரை பகிர்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...