24_12

கோவிலை விட்டு நீங்காத கைம்பெண்...


கிறிஸ்து பிறப்புக் காலம் 

30.12.2024 - திங்கட் கிழமை 

ஒரு போதும் உனை பிரியா நிலையான உறவொன்று வேண்டும்

என் உடல் கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்ல வேண்டும்... என்ற பாடல் வரிகள் வெற்று வார்த்தைகளாகவே போய் விட்டது. கடவுள் ஒருபுறம் நம் வாழ்க்கை மறுபுறம்.

கடவுள் பயம் இல்லாத காரணத்தால் இன்று பல அக்கிரமங்கள் அரங்கேறுகின்றன. கடவுளை விட்டு பிரிந்து செல்லுதல் என்பது கடவுள் வகுத்திருக்கும் வாழ்க்கை நெறி/உண்மை வாழ்வு ஆகியவற்றில் இருந்து விலகி செல்வது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 2:36-40) பானுவேலின் மகளாகிய அன்னா, எண்பத்தி நான்கு வயது ஆன நிலையிலும் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து வருகிறார். கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட மீட்பரை கண்டு கடவுளை போற்றி புகழ்கிறார். அக்குழந்தையை குறித்து எல்லாரிடமும் பேசுகிறார். 

கோவிலை விட்டு நீங்காததற்கு காரணம், கடவுளை போற்றி புகழ்வதற்காக, கோவிலில் திருப்பணி செய்ய.

இன்று நம்மை போன்றோரும் திருப்பலி முடிந்த பிறகு, கோவிலை விட்டு நீங்காமல் இருக்கிறோம். அதற்கு காரணம் மற்றவர்களை குறித்து அவதூறு பேச, மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்க, கடவுளின் திருப்பெயரை இழிவுப்படுத்த...

கோவிலும் கோவில் இருக்கும் வளாகமும் புனிதம் நிறைந்தது. ஆனால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் இங்கு கூடி இருந்து தான் பலரின் குடும்பத்தை அழிக்கிறார்கள்.

கோவிலின் புனிதம் கெடும் போது, நாம் கடவுளை தான் இழிவுப்படுத்துகிறோம்.

நாம் தேடிச் செல்லும் கடவுளின் கோவிலும் நம் உள்ளமும் இறைவனின் வருகைக்காக ஆயத்தமாக இருக்க வேண்டும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...