திருவருகைக் காலம் முதல் வாரம்
07.12.2024 - சனிக் கிழமை
"உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை" - சபை உரையாளர் 3:13
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9:35-10:1,6-8) இயேசு நகர்கள் ஊர்கள் தோறும் சுற்றி வந்து தொழுகைக் கூடங்களில் கற்பித்தார், நோய் நொடிகளைக் குணமாக்கினார். மக்கள் மீது பரிவுக் கொண்டார்.
பரிவுக் கொண்டதோடு நின்று விடவில்லை, தம் சீடர்களிடம் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தார், பணி செய்ய அழைப்பு விடுத்தார்.
நோயுற்றவருக்கு மருத்துவம் தேவை என்பது போல வழித் தவறிப் போன இஸ்ரயேல் மக்களிடம் அனுப்புகிறார். கொடையாகப் பெற்றதை கொடையாக வழங்க அழைக்கிறார்.
இந்த உலகில் எதுவும் நமக்கானது அல்ல; எல்லாம் நாம் பெற்றுக் கொண்டது. எதையும் கொண்டு செல்ல முடியாது. விட்டு விட்டு தான் செல்ல வேண்டும் (உயிரையும் சேர்த்து). அப்படி இருக்க பெற்றுக் கொண்ட அழைப்புகேற்ப வாழாதது தவறு தானே.
சீடர்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அதிகாரம் திருமுழுக்கின் வழியாக நம்மிடமும் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஆட்டிப்படைக்க அல்ல... இல்லாமையை இவ்வுலகில் இல்லாமல் பண்ணுவதற்கே...
பெற்றதை பகிர்ந்து கொடுப்போம்... இருக்கும் வரை இயன்றதை செய்வோம் இயலாதவருக்கே...
அதிகாரம், பொருள், அன்பு, மகிழ்ச்சி, இரக்கம் ஆகியவை பகிரப்படும் போது இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை உணரலாம்.
இருப்பதை பகிராத போது, மேலும் எப்படி நாம் பெற்றுக் கொள்ள முடியும்? என்ற கேள்வி நம்மில் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.
No comments:
Post a Comment