24_08

புனித ஜான் மரிய வியான்னி (ஆகஸ்ட் 04)


18ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக மக்கள் கடவுளை மறந்து, தங்களுடைய மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தனர். 1786ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லயன்ஸ் என்னும் நகருக்கு அருகிலுள்ள டார்டில்லி என்னும் சிற்றூரில் இருந்த ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் வியான்னி. இவரோடு பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். இவர் சிறுவயதில் ஆடுகளை மேய்த்து அதன் மூலம் குடும்பத்திற்கு உதவியாக இருந்து வந்தார்.

சிறு வயது முதல் மிகுந்த பக்தி மிக்கவராக வாழ்ந்து வந்தார். குருவாக மாற வேண்டும் என்ற எண்ணம் இவருக்குள் எழுந்தது. தன்னுடைய 12வது வயதில் குருமடத்தில் சேர்ந்தார். ஆனால் குருமடத்தில் சேர்ந்த, பிறகு அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்களை கற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் இலத்தின் மொழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஆசிரியர் நியமிக்கப்பட்டு பாடங்களைச் சொல்லிக் கொடுத்த போதிலும் கூட, சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததினால் இவரால் எளிதாக பாடங்களை கற்றுக் கொள்ள முடியவில்லை.

இது சரியான மக்கு கழுதை என சொல்லப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் இவருடைய ஆன்ம குரு அருள்பணி. பெல்லி, வியான்னி படிப்பில் வேண்டுமானால் பின்தங்கியவராக இருக்கலாம் ஆனால் இவர் ஆன்மாவில் மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவர்; என்று சொல்லி வியான்னி குருவாக மாறுவதற்கு உறுதுணையாக இருந்தார். 1815ஆம் ஆண்டு வியான்னி குருவாக மாறினார். தான் குருவாக உறுதுணையாக இருந்த ஆன்மகுருவிடமே ஓராண்டு உதவியாளராக பணி புரிந்தார்.

அதன் பிறகு லயன்ஸ் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 250 குடும்பங்களை கொண்ட சாதாரண ஆர்ஸ் பங்கில் பங்கு தந்தையாக நியமிக்கப்பட்டார். வயது முதிர்ந்தவர்கள் மட்டும் கோயிலுக்கு வந்த அந்த பங்கில் எல்லாரையும் கோவிலுக்கு அழைத்து வருவது வியான்னிக்கு மிகவும் கடினமாக இருந்தது. வீடுகளுக்கு சென்று அவர்களோடு பேசி அவர்களை இறை நம்பிக்கையில் வளர்த்தெடுத்து அதன் மூலம் அவர்களை இறைவனிடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். வியான்னி ஆர்ஸ் நகருக்கு சென்ற 10 ஆண்டுகளில் மக்களுடைய ஆன்ம வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருந்தது. ஒப்புரவு அருளடையாளம் பெற்றுக்கொண்டு மக்கள் மனம் திரும்பி கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ தொடங்கினர். புனித ஜான் மரியா வியான்னி பதினான்கிலிருந்து பதினெட்டு மணி நேரம் வரை கோவிலில் செலவழித்தார்.

பலரும் இவரிடம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவதற்கு வந்தனர். ஆர்ஸ் நகருக்கு பாவமன்னிப்பு பெறுவதற்கு வந்த மக்களின் கூட்டத்தால் சிறப்பு பேருந்து வசதிகள் கூட ஏற்படுத்தப்பட்டன.

தன்னிடம் ஒப்புரவு அருளடையாளம் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் மனங்களை ஊடுருவி பார்க்கும் திறனை பெற்றிருந்தார் புனித ஜான் மரிய வியான்னி.

இறைவனின் மக்களை இறைவனிடம் கொண்டு வர அயராது உழைத்த வியான்னி 1859ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார் 1925ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இவர் குருக்களின் பாதுகாவலராக உயர்த்தப்பட்டார்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...