24_08

சோதிக்கப்படும் நம்பிக்கை...


பொதுக்காலம் 18ஆம் வாரம்

07.08.2024 - புதன் கிழமை

"வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்" - நீதிமொழிகள் 17:3

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 15:21-28) கானானியப் பெண்ணின் நம்பிக்கையை பாராட்டுகிறார் இயேசு.

இங்கு கானானிய பெண் சோதிக்கப்படவில்லை, மாறாக அவருடைய நம்பிக்கை சோதிக்கப்படுகிறது. சீடர்கள் பெண்ணை பார்த்து, கத்திக் கொண்டு வருகிறார் என்று சொல்கிறார்கள். இயேசு அந்த பெண்ணிடம், பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய் குட்டிகளுக்கு போடுவது முறையல்ல என்கிறார்.

இத்தனை தடைகளையும் தாண்டி நம்பிக்கை இழக்காமல், மேசையில் இருந்து விழும் சிறு துண்டுகளை நாய் குட்டிகள் தின்னுமே என்று அந்த பெண் பதில் சொல்கிறார்.

ஏற்கனவே மகளுக்கு பேய் பிடித்து துன்பப்படக்கூடிய அந்த பெண்ணிடம் இத்தனை தடைகள் முன்வைக்கப்பட்டாலும் நம்பிக்கையில் நிலைகுலையாமல் தன் மகளுக்காக வேண்டுகிறார் அந்த கானானியப் பெண். 

இந்த பெண்ணின் நம்பிக்கை நம் நம்பிக்கைக்கு சவால்...

நற்செய்தி குறித்த சில கேள்விகள்...

1. இஸ்ரயேல் குலத்தாருள் காணாமல் போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் என்று  இயேசு சொல்வதன் பொருள் என்ன?

இது இஸ்ராயேல் குலத்தை முதன்மைப்படுத்த அல்ல, மாறாக கானானியப் பெண்ணின் நம்பிக்கையை சோதிக்க...

இறுதிவரை நம்பிக்கையில் நிலைதிருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த...

2. இயேசு அப்பெண்ணை சிறுமைப்படுத்தவா அப்படி சொன்னார்?

நிச்சயமாக இல்லை. இழிவுபடுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் இயேசுவின் நோக்கமல்ல. அந்த பெண் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பாடம் புகட்டவே அப்படி சொன்னார்.

3. இயேசுவின் இலக்கு மக்கள் யார்?

மாந்தர் அனைவரும்... மாற்கு 16:15இல் இவ்வாறு சொல்கிறார், இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். அனைவரும் அவருக்கு உரியவர்கள்.








No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...