பொதுக்காலம் 18ஆம் வாரம்
06.08.2024 - செவ்வாய்க் கிழமை
உருவமற்றவர் உரு பெற்றார்... இறைத்தன்மையிலிருந்து மனிதத் தன்மை என்னும் உரு மாற்றம்... இது முதல் மாற்றம்...
ஆண்டவருடைய தோற்ற மாற்றத்தின் நோக்கங்கள்...
1. விண்ணக மாட்சியை சீடர்கள் கண்டுகொள்ள
2. இயேசுவின் பாடுகளின் உட்பொருளை உணர்ந்து கொள்ள
3. இயேசுவின் தெய்வீக தன்மையை கண்டுகொள்ள
4. திருச்சட்டத்தின் அடையாளமாக மோசேயும் இறைவாக்கினர்களின் அடையாளமாக எலியாகவும் தோன்றுகிறார்கள். திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் இயேசு நிறைவேற்ற வந்தார் என்பதன் அடையாளத்தை உணர்த்த
5. சீடர்களின் அவநம்பிக்கையை போக்க
6. மூவொரு இறைவனின் ஒன்றிப்பை உணர்த்த
7. இயேசு இறந்து உயிர்த்தெழுவார் என்பதன் முன் அடையாளமாக
8. மகனின் பணியை குறித்து தந்தை சான்று பகர்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள
இவ்வாறு இயேசுவின் தோற்ற மாற்ற அல்லது உருமாற்ற நிகழ்வின் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:2-9) தன்னுடைய உருமாற்ற நிகழ்வின் போது பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் உடன் அழைத்துச் செல்கிறார். மற்ற சீடர்களின் பிரதிநிதியாக இவர்கள் முன் வைக்கப்படுகிறார்கள்.
மாற்றம் வாழ்வில் தேவை. அந்த மாற்றம் தீமையிலிருந்து நன்மையை நோக்கி இருளிலிருந்து ஒளியை நோக்கி கடந்து செல்ல வேண்டும்.
இயேசுவின் ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளி வீசியபோது பேதுரு மெய் மறந்து போனார். என்ன பேசுவது என்று தெரியாமல், ரபி நாம் இங்கேயே இருப்பது நல்லது என்று முணங்க ஆரம்பித்தார்.
நற்செய்தி பதிவு செய்கிறது அவர் அச்சம் மிகுந்தவராய் இவற்றை பேசினார் என்று.
ஆனால் தந்தை கடவுளுடைய பதிலோ "என் அன்பார்ந்த மகன் இவரே; இவருக்கு செவி சாயுங்கள்" என்பதாக இருந்தது.
செவி சாயுங்கள் என்பதை இரண்டு நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம்.
1. ஏற்கனவே செவி சாய்த்துக் கொண்டு இருக்கக்கூடிய நிலை, தொடர்ந்து செவி சாய்க்கும் மனநிலை.
2. மற்றொன்று இன்னும் அவரது குரலுக்கு செவி சாய்க்கவில்லை அவருடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடங்கள் என்பதாகும்.
இயேசுவின் உருமாற்றம் நம் வாழ்விலும் மாற்றத்தை கொணரட்டும்...
மாற்றம் சொல்லிலும் செயலிலும் வெளிப்படட்டும்...
No comments:
Post a Comment