24_08

புனித தோமினிக் - நினைவு


பொதுக் காலம் 18ஆம் வாரம் 

08.08.2024 வியாழக் கிழமை

இவர் 1170 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள காஸல் என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம். 

இவர் தன்னுடைய தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவருடைய தாய் ஒரு கனவு கண்டார். அதில் ஒரு நாயானது தன்னுடைய வாயில் விளக்கு ஒன்றை கவ்விக்கொண்டு தான் போகும் இடமெல்லாம் ஒளியேற்றிக் கொண்டே போனது. இந்த கனவின் வழியாக 'தன் வயிற்றிலிருந்து பிறக்கும் அந்த குழந்தையும் உலகிற்கு ஒளியாய் இருக்கும்' என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

இவருக்கு திருமுழுக்கு அளிக்கப்பட்ட போது இவருடைய நெற்றியில் விண்மீன் ஒன்று இருப்பதை இவருடைய பாட்டி கண்டார். எனவே குழந்தை ஒரு சாதாரண குழந்தை அல்ல கடவுளால் ஆசி பெற்ற குழந்தை என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். 

புனித தோமினிக் புனித அகுஸ்தின் சபையில் சேர்ந்து, குருத்துவ படிப்பிற்காக தன்னை தயாரித்து 1203 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 

பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற போது இவர் கண்ட காட்சி இவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அங்கிருந்த மக்கள் அல்பிஜீயன்ஸ் என்னும் தப்பறைக் கொள்கையால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அதாவது உடல் தீயது. எனவே இயேசு கிறிஸ்து மனுவுரு எடுத்தது உண்மையல்ல என்றும் இவ்வுலகில் மனித இன உற்பத்தி தேவையற்றது என்ற கொள்கை தான் அந்த அல்பிஜீயன்ஸ் கொள்கை. கொள்கையை புனித தோமினிக் கடுமையாக எதிர்த்தார். அதற்கென்று ஒரு சபையையும் தோற்றுவித்தார். 

தோமினிக் புனித மரியாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். செபமாலை பக்தி பரவுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் இவர். தன்னுடைய தாழ்ச்சி மிக்க வாழ்க்கையால் இறுதிவரை இறைவனுக்கு பணி புரிந்தார். 

1221 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1234 ஆம் ஆண்டு புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

துணை நின்ற நூல் - "மகத்தானவர்கள்"

ஆசிரியர் - அருள்பணி. மரிய அந்தோனிராஜ்

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...